தஞ்சை மாவட்டத்திலுள்ள 13 பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்

மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1079 மாணவர்களுக்கும்ஸ 1432 மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன

Update: 2023-12-28 09:30 GMT

 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தஞ்சை  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ரூபாய் 1 கோடியே 21 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்  தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கான, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா   தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வல்லம் அரசுஆண்கள் மேல் நிலைப் பள்ளி, மாரியம்மன் கோயில்அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய அந்தோணியர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூயஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்பி.வி.செல்வராஜ்பெண்கள்மேல்நிலைப்பள்ளி,

தஞ்சாவூர் வீரராகவ மேல் நிலைப் பள்ளி, தென்கீழ்அலங்கம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, மேம்பாலம் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1079 மாணவர்களுக்குரூ.52,87,100/- மதிப்பிலான மிதிவண்டிகளும், 1432 மாணவிகளுக்குரூ.68,16,320/- மதிப்பிலான மிதிவண்டிகளும் ஆக மொத்தம் ரூ.1,21,03,420/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்து ஒரு இலட்சத்து மூவாயிரத்துநானூற்றி இருபது மட்டும்) மதிப்பிலான மிதிவண்டிகள்  வழங்கப்பட்டுள்ளது. 

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு) , .டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்) , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்டஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணைமேயர்.அஞ்சுகம்பூபதி, மாவட் டஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வன், தஞ்சாவூர் மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர்.மேத்தா, தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் .இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலஅலுவலர் வீ.சுதாராணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)மெ.கோவிந்தராஜ், பள்ளித் தாளாளர் இரா.பன்னீர்செல்வம், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்.என்.ஏ.அருணபாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News