தஞ்சையில் ஜூன் 11 -ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

மாவட்டநிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது

Update: 2022-06-05 07:30 GMT

தஞ்சாவூர் மாவட்டநிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 11.06.2022 (சனிக்கிழமை) அன்று தாராசுரம் KSK பொறியியல் மற்றும் தொழில் நுட்பகல்லூரியில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது.

இவ்வேலை வாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 5-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்புவரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ. கல்விதகுதி களுக்குரிய வேலை நாடுவோருக்கு 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள் சேர்ப்பும்  நடைபெறுகிறது. மேலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களின் சுய விவர அறிக்கை,கல்விச் சான்றுகள்,ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம் . மேலும்,விவரங்களுக்கு 04362-237037, 9442557037 என்ற தொலைபேசிஎண்களை தொடர்பு கொள்ளலாம் என  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News