தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சையில் டிச 9 -ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுமென மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்

Update: 2023-12-05 06:30 GMT

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்டவேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  ஆகியவை இணைந்து நடத்தும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்புமுகாம்  9.12.2023 அன்றுகாலை 8. மணிமுதல் 3. மணி வரை தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலி ருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலை நாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள் சேர்ப்பும்  நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற் கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின்;  நகல்களுடன்; கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News