தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

Update: 2022-04-07 13:00 GMT

தேருக்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்தது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறுகின்றது. இதற்காக ராஜவீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் தேரினை பராமரிப்பு செய்யும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக தொழிலாளர்கள் சக்கரத்திற்கு க்ரீஸ் வைத்தும், பெயிண்ட் அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News