நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்

Update: 2022-02-09 08:45 GMT

 தஞ்சை நுகர் பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்புஆன்லைன் கொள்முதல் அறிவிப்பு நகலை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு விவசாயிகள்

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு நகலை தீ வைத்து எரித்துப் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார்  கைது செய்தனர்.

நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை கைவிட வேண்டும், அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான அளவு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்  போராட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென ஆன்லைன் கொள்முதல் அறிவிப்பு நகலை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News