காரில் கஞ்சா கடத்தல்: தஞ்சை அருகே 5 பேர் கைது

ஆந்திராவில் இருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா, தஞ்சை வல்லம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-11 06:00 GMT

நாகைக்கு காரில் கஞ்சா கடத்திய வழக்கில், தஞ்சை அருகே கைதான ஐந்து பேர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக காவல்துறை தனிப்படையினர்,  தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் புதூர் பிரிவு சாலை அருகே,   காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திராவில் இருந்து நாகை மாவட்டத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக, நாகை மாவட்டத்தை சேர்ந்த அன்புச்செல்வன், ஈரோட்டைச் சேர்ந்த கௌதம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்த ரவிக்குமார், சந்திரதோரா, அப்பாவு ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து காரையும் 60 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News