டிச 29 ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்
விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துகளை கோரிக்கைகளாகத் தெரிவித்து பயன் பெற்றிடலாம்
தணு;சாவூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர் வரும் 29.12.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10. மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந் திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப் பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்ர்கள்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9. மணிமுதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துகளை கோரிக்கைகளாகத் தெரிவித்து பயன் பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்..