பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு
பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கே .புதூர் பாண்டியன் நகர் காந்திபுரத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் பாட்டில் மணி (எ) மணிகண்டன் (25). இவர் தற்போது திருச்சி சுப்பிரமணியபுரம், முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
மேலும் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணை உறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில், பாட்டில் மணி என்கிற மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.