கொள்ளிடம் கரையோரத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகள்: அரசு கொறடா, ஆட்சியர் ஆய்வு

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்

Update: 2022-08-05 06:00 GMT

 கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகளை அரசுதலைமை கொறடா கோவி. செழியன், மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிநீர் பிடிப்பு பகுதிகள் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கொள்ளிடம் கரையில் முன்னேற்பாடு பணிகளை அரசுதலைமை கொறடா கோவி. செழியன், மாவட்டஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர்  அரசுதலைமை கொறடா கோவி.செழியன்  தெரிவித்ததாவது: காவிரிநீர் பிடிப்புபகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாகமேட்டூர் அணைக்குநீர்வரத்துஅதிகமாகஉள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியைஎட்டியுள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.40 லட்சம் கன அடிக்குமேல் திறந்துவிடப்பட்டுள்ளது.

  எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் திருவையாறு வட்டம், விளாங்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி, கூடத்தூர், குடிக்காடு, பாபநாசம் வட்டம், சருக்கை, புது குடிசை, தட்டுமால், கும்பகோணம் வட்டம், குடிதாங்கி, மகாராஜபுரம், அணைக்கரை வரை உள்ள கொள்ளிடம் கரையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

காவிரிநீர் பாய்ந்து வரும் காவிரி,வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ , நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன் படம் (செல்பி) எடுப்பதை   தவிர்த்திடவேண்டும். கால்வாய்கள்,ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாட வெளியில்  செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.



மேலும் இந்தஆய்வில் கரையைவிட்டுதண்ணீர் வெளியேவராமல் இருக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள  இடத்தையும் பொதுமக்கள் வெள்ளம் வந்தால் தங்குவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை பணியாக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும்   பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாகஅழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நமது மாவட்டத்தில் வெள்ளஅபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை ஒன்றிணைத்து பல்வேறுகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய 6 தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வின் போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, நீர்வளத்துறை உதவிசெயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவிபொறியாளர் பூங்கொடி,பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதிகண்ணதாசன்,வட்டாட்சியர்கள் பழனியப்பன், (திருவையாறு),மதுசூதனன், (பாபநாசம்),தங்கபிரபாகரன் (கும்பகோணம்),மற்றும் பலர் உடன் சென்றனர். 

Tags:    

Similar News