தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6,17,366 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 32,903 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,637 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்பொழுது 4,891 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.