அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க முதல்வருக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியக்குழுவின் சார்பில் ஒன்றிய செயலாளர் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்

Update: 2022-03-16 11:30 GMT

அம்மாபேட்டை தாலுகாவாக மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது அம்மாபேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வங்கிகள் உள்ளது கடந்த காலங்களில் அம்மாபேட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வந்தது அம்மாபேட்டை ஒன்றியத்தின் மைய இடமாக இருந்து வருகிறது .

இங்கிருந்து அம்மாபேட்டை ஒன்றியம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியும் இருந்து வருகிறது அம்மாபேட்டையில் தலைமையிடமாக கொண்டு தாலுக்கா அமைத்தால் அனைத்துப் பகுதி மக்களும் பயன் பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகவே அம்மாபேட்டை தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியக்குழுவின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர். செந்தில்குமார் கோரிக்கை மனுவை தமிழக முதல்வர், வருவாய் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் , பாபநாசம்சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News