தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப் படுகிறார்கள்

Update: 2023-12-22 09:00 GMT

பைல் படம்

பொதுமக்கள் இணைய வழி வாயிலாக தற்போது பெற்றுவரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள்  மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  சீரிய வழிகாட்டுதலின் படி ”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அனைத்து மாநகராட்சிகள்/நகராட்சிகள்/ பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 10. மணி முதல்பிற்பகல் 3. மணி வரைநடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 23.12.2023 அன்றுகாலை 10.00 மணிமுதல் பிற்பகல்3. மணி வரை மாநகராட்சியில் தஞ்சாவூர் என்.கே.ரோடு, காவேரிஹால் மற்றும் கும்பகோணம் பேச்சியப்பன் தெரு, பாலாஜி மஹாலிலும், பேரூராட்சியில்1.சோழபுரம் G.S.D திருமண மண்டபம், 2.மெலட்டுர் அரசுமேல்நிலைப் பள்ளி 3.திருப்பனந்தாள் வேலவன் திருமண மண்டபம் மற்றும் 4.திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல் நிலைப் பள்ளியிலும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியான கடகடப்பை சமுதாய கூடம் மற்றும் பாபுராஜபுரம்  ஊராட்சி நூலகத்திலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்  எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின்சாரவாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப் புறவளர்ச்சித் துறை, உள்மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  துறை (மாவட்ட  தொழிற் மையம்), தொழிலாளர் நல வாரியம், கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளில் கணினி மூலம்பதிவு செய்து  தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிட மிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை   தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News