தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

Update: 2023-12-21 14:00 GMT

பைல் படம்

பொதுமக்கள் இணைய வழிவாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம்பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய வழிகாட்டுதலின் படி ”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் தொடக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அனைத்து மாநகராட்சிகள் / நகராட்சிகள்/ பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 22.12.2023 அன்று காலை 10. மணிமுதல் பிற்பகல் 3. மணிவரை மாநகராட்சியில் தஞ்சாவூர் பூக்கார வாண்டையார் தெரு, இருதயபேராலய மக்கள் மன்றம் மற்றும் கும்பகோணம் பக்தபுரி தெரு, பவளம் திருமண மஹாலிலும்,  நகராட்சியில் பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு, பி.ஆர்.டி. மஹால் மற்றும் அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்திலும், பேரூராட்சியில் 1.ஆடுதுறை கலையரங்கம், கோசிமணிவீரசோழன் திருமண மண்டபம், 2.அய்யம்பேட்டை டி.கே.ஜி.மஹால் 3.மேலதிருப்பந்துருத்தி சின்ன பள்ளிவாசல் மண்டபம், 4.திருக்காட்டுப்பள்ளி பழமார் நேரிசாலை, மாலா திருமண மண்டபம் 5.வல்லம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சமுதாய கூடத்திலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை , உள் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (மாவட்டதொழிற் மையம்), தொழிலாளர் நல வாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பொது மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News