தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிசங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்

பைக்கில் வந்த மர்மநபர் ஜெயமேரி அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்

Update: 2022-03-02 13:30 GMT

தஞ்சை ஆர்ஆர் நகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலிச்செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார்  தேடி வருகின்றனர்.

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மரியமார்ட்டின். இவரது மனைவி ஜெயமேரி (38). இவர் தனது மகள்களுடன் ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மநபர் ஜெயமேரி அணிந்திருந்த ஏழு பவுன் தாலிச்செயின் மற்றும் அரை பவுன் டாலரை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ஜெயமேரி தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில அளித்த புகாரின் பேரில்  போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News