மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக வெளிநடப்பு
சொத்து வரி உயர்வை கண்டித்து, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
தமிழக அரசு சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூரில் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக கூட்டத்தில் மேயர் ராமநாதன் சொத்து வரி தீர்மானம் நிறைவேற்றிய போது ,இதில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.