தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

தவிடு மூட்டைகளுக்குள் 120 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக தஞ்சாவூரில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-08-13 03:00 GMT

ஓட்டுநர் அன்பழகன்.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் வல்லம் காவல் நிலையத்தினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்திலிருந்து நாகைக்கு தவிடு மூட்டைகள் ஏற்றிச் சென்ற மினி வேனை காவல் துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, தவிடு மூட்டைகளுக்கு இடையே 4 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அன்பழகன் (40), சேலம் மாவட்டம், ஓமலூர் சிக்கம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் (45), கிருஷ்ணமூர்த்தி (31) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News