கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட திமுக

தென்காசி மாவட்ட பள்ளிகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு தென்காசி மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது

Update: 2023-01-31 05:08 GMT

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பின் பொய்யாமொழி மகேஷ் அவர்களிடம் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் மனு வழங்கிய போது எடுத்த படம்.


தென்காசி தெற்கு மாவட்டம்,தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் புதிய வகுப்பறை காட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 

  • தென்காசி ஆண்கள் ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் ஒரு கோடியே 69 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயும்
  • சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடியே 27 லட்சத்தி 8000 ரூபாயும்
  • சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 2 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம்
  • குறும்பலா பேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடியே 27 லட்சத்தி மூன்று ஆயிரம்
  • மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 63 லட்சத்து 54 ஆயிரமும்
  • ஆக மொத்தம் ஏழு கோடியே 20 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது 

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடியே 69 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயும் 

  • புளியரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடியே 27 லட்சமும்
  • வேலாயுதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 42 லட்சத்து 36 ஆயிரம்
  • ஊர் மேனியழகியான்அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 44 லட்சத்து 72 ஆயிரமும்

மொத்தம் 4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது

ஆக மொத்தம் 11 கோடியே 43 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தென்காசி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தென்காசி மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் பொட்டல்புதூர் காவூர் ஆகிய பள்ளிகள்அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தும் பட்டியலில் உள்ளது. அதனை இந்த கல்வி ஆண்டில் தரம் உயர்த்திடவும் கோரிக்கை அவர் மனு வழங்கினார்

Tags:    

Similar News