தென்காசியில் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

தென்காசியில் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2024-05-02 07:38 GMT

தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பந்தல் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை பெருமளவு தவிர்த்து உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி  வெப்பத்தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அனல் காற்றும் வீசி வருகிறது.

கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், தன்னார்வ மற்றும் சமூக அமைப்புகள் சார்பில்  தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தென்காசி நகரின் முக்கிய பகுதியான வேன் ஸ்டாண்டில் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் முரளி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரகாஷ், மைதீன், செந்தில், மாரிமுத்து, முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News