திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்!

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தொடங்கி வைத்தார்

Update: 2024-05-04 04:45 GMT

பட விளக்கம்: பொது மக்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நீர்மோர் வழங்கிய போது எடுத்த படம்

தென்காசியில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்  திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சில பகுதிகளில் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பொது இடங்களிலும் மக்களின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் உள்ளிட்டோர் பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் திமுக சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், முதியோர்கள், பெண்கள் தண்ணீர் பந்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோர் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News