ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் தேமுதிகவினர் வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு அடைய தொடங்கி உள்ளது.

Update: 2021-09-21 11:39 GMT

தென்காசியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேமுதிகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்து களம் காண்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பு அடைய தொடங்கி உள்ளது. தேமுதிக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரமேஷ், ஏழாவது வார்டு பகுதிக்கு சரோஜா, 5-வது வார்டுக்கு சின்னதம்பி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுவின் போது மாநில துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டத் துணைச் செயலாளர் பிரின்ஸ் மாதவன், ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன், ஒன்றிய பொருளாளர் திவான் ஒலி, நகரச் செயலாளர் சுடலைமணி, பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணிய ராஜா, மாரிச்செல்வம், குற்றாலம் பேரூர் செயலாளர் ஜடா முனி, தென்காசி நகர இளைஞரணி செயலாளர் புலியூர் பேச்சி, ஆலங்குளம் ஒன்றிய பொருளாளர் ஆனந்த அருணா, செவலை செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News