இலஞ்சி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-13 09:16 GMT

இலஞ்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள். தென்காசி சட்டமன்ற உறுப்பினர்  பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் சாலைகள் மோசமாக காணப்பட்டது. இதனை சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று இலஞ்சி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், காங்கிரஸ் வட்டார தலைவர் பெருமாள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News