உணவின்றி தவித்தோருக்கு உதவிக்கரம்: தென்காசி போலீசாரின் மனிதநேயம்
முழு ஊரடங்கின்போது உணவின்றி தவித்தவகளுக்கு, தென்காசி போலீசார் உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் (16.01.2022) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணத்தினால் எந்த ஒரு உணவகமும் இல்லாத நிலையில் ஆதரவற்ற பலர், உணவின்றி தவித்தனர்.
அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை தேடிப்போய் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து, நேரில் உணவளித்து, காவல்துறையினர் எப்போதும் உங்கள் நண்பன் என்பதை உணர்த்தினர். மனித நேயம் மிக்க தென்காசி காவல்துறையினரின் இத்தகைய செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.