தென்காசி அருகே கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-07 04:15 GMT

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில்  கொலை வழக்கு மற்றும் குத்துக்கல்வலசையில் காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, அருகில் இருந்த கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று பதற்றத்தை உண்டாக்கும் வகையில் செயல்பட்ட ஜேசு ராஜன் (வயது 24), என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  பரிந்துரையின் படி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News