தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-01-20 04:21 GMT

தென்காசி சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்ற  வீரவணக்க நிகழ்ச்சி.

 



 


சிஐடியு தென்காசி மாவட்ட குழு சார்பாக ஜனவரி 19 தியாகிகள் தினம் வீரவணக்க நிகழ்ச்சி தென்காசி சிஐடியு அலுவலகம் முன்பு சிஐடியு தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, லெனின்குமார், குருசாமி, கிருஷ்ணன், தென்காசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கே மாரியப்பன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சலீம் முகமது மீரான், CITU தென்காசி வட்டார தலைவர்கள் நாகலிங்கம், ஆய்க்குடி ஐயப்பன், கருப்பையா, நாகரத்தினம், சிஐடியு சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் பன்னீர்செல்வம், அரியபுரம் முருகேசன், செண்பகம் பண்பொழி மாரியப்பன், இந்திய மாணவர் சங்கம் பாரதி உட்பட அனைத்து தோழர்களும் தியாகிகள் தின அஞ்சலி செலுத்தி பங்கேற்றனர்.

Tags:    

Similar News