பாஜக தலைவர்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதை விமர்சித்த பாஜக தலைவர்களை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-19 01:45 GMT

பாஜக தலைவர்களை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தலைவர்களை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வெளிநாட்டில் இளம் தலைவர் ராகுல் காந்தி பேசியதை விமர்சித்து தரக்குறைவாக பேசி வரும் பாஜக தலைவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுரண்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில்  மாலை சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்பு மாவட்டத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா,சுரண்டை நகர மன்ற தலைவர் வள்ளி முருகன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள்,கதிரவன், நகரத் தலைவர்கள் மாடசாமி ஜோதிடர்,சிங்கக்குட்டி,ஜெயபால் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News