வேலைவாய்ப்பு மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Update: 2022-09-22 14:45 GMT

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். கதவு எண்.144, 60 அடி ரோடு, சக்திநகரில் 25.01.2022 முதல் செயல்பட்டு வருகிறது

இவ்வலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்ட வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட TNPSC Gr-1, TNPSC Gr II முதன்மை தேர்வு மற்றும் TNUSRB Grade-II ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகத்தில் வைத்து நடத்தப்படுகிறது போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இப்பயிற்சி வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:முற்றிலும் இலவச பயிற்சி வகுப்புகள்வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.முன்னனி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆசியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லை தேர்வு எழுதுதல் பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மேற்காணும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 96992554182 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News