பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்எல்ஏ ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர்

Update: 2023-01-31 03:23 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்த போது எடுத்த படம்.

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சாலையில் படுத்து உருண்டு போராட்டம். ரவுடி ராஜாவை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜா, பாஜக பிரமுகரான ராஜ்குமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக பிரமுகர் ராஜ்குமார் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜக பிரமுகரை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீது காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யாததால் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ராஜா மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாஜகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயற்சி செய்தபோது,  ஆவேசம் அடைந்த பாஜகவினர் தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து படுத்து உருண்டு, ரவுடி ராஜாவை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர்  கைது செய்து அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைத்தனர். 

திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய கோரி பாஜகவினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News