மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

Update: 2021-06-14 03:28 GMT

குற்றாலம் ஐந்தருவி

மேற்குதொடர்ச்சிமலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளான குற்றாலம், செங்கோட்டை, கடையம், பவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம், மெயினருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News