சூடனை சாப்பிட்ட குழந்தை பலி

Update: 2021-01-25 18:30 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் கிராமத்தை சேர்ந்தவர் யேசுராஜ். வயது 36. ஆலங்குளத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி நிவேதா. தம்பதிக்கு ராஜேஸ்வரி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. கடந்த 18ம் தேதி இரவு நிவேதா தன் மகளுக்கு திருஷ்டிக்காக சூடம் தடவி உள்ளார். அப்போது குழந்தை அழுது கொண்டிருந்ததால் சூடம் டம்பாவை அவர் குழந்தைக்கு விளையாட கொடுத்ததாக கூறப்படுகிறது. தாய் நிவேதா வீட்டின் முற்றத்தில் சூடத்தை கொளுத்தி விட்டு வீட்டிற்குள் வருதற்குள் குழந்தை சூடம் டப்பாவை திறந்து சூடம் வில்லைகளை கையில் எடுத்து விழுங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். பின்னர் சிசிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராஜேஷ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தது.இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Similar News