இராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் பழ சந்தை மாற்றம்

ராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் பழசந்தை கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Update: 2021-05-11 05:15 GMT

இராமநாதபுரம் அரண்மனை, சாலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த  நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு செயல்பாடு வந்த அத்தியாவசிய பொருட்களான காய்கறி கீரை பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது காய்கறி, பழங்கள் விற்பனை கடைகள் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜா பள்ளி விளையாட்டு அமைதானத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிற்பகல் 12 மணிவரை செயல்படும் இந்த கடைகள் இன்று முதல் துவக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வருவோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தைக்கு வரும் அனைவருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, நிலவேம்பு கஷாயம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News