தனுஷ்கோடி அருகே மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்: தேடும்பணி தீவிரம்
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி. மீனவரான இவர் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
அப்போது கடல் சீற்றம் காரணமாக மீனவர் கடலில் தவறி விழுந்து மயமானார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.