100அடி தூரத்திற்கு உள்வாங்கிய அக்னிதீர்த்த கடல்
இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சங்குமால் மற்றும் துறைமுக பகுதியில் நேற்று இரவு கடல் மட்டம் உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று காலை சுமார் 150 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கிய உள்ளது. இதனால் கடலின் அடியில் உள்ள பாறைகள், பவளப்பாறைகள், தாவரங்களும், புற்களும் தண்ணீர் இன்றி தெளிவாக காணமுடிகிறது. மேலும் கரையில் கிடக்கும் சிறியரக மீன்களை காக்கைகளும், நாய்களும் உணவாக்கி வருகின்றனர்.