கேஸ் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் போராட்டம்
கேஸ் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெண்கள் விறகு அடுப்பில் சமைத்து போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கேஸ் விலையை உயர்த்தியதை கண்டித்தும், சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதேநேரம் பெண்கள் விறகு வைத்து அடுப்பு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கேஸ் சிலிண்டரை தூக்கில் தொங்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.