பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்

பாம்பன் பாலத்தை கடந்த சென்ற கப்பல்கள்-கண்டு களித்த சுற்றுலா பயணிகள்.

Update: 2021-03-24 16:31 GMT

தூத்துக்குடியில் இருந்த சென்னை துறைமுகத்திற்கு பாம்பன் பாலம் வழியாக 2 கப்பல் ஒரு இலுவை கப்பல் கடந்த சென்றது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.


இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூக்கு பாலம் திறக்கப்பட்டு, பாம்பன் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன 2 கப்பல்கள் பாம்பன் பாலம் வழியாக பாலத்தை கடந்து சென்றது.

இந்த கப்பல் துறைமுகத்திற்கு மாலுமிகளை ஏற்றிக்கொண்டு கப்பலில் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு புதுச்சேரியில் இருந்து வந்த பர்ஜேர் இழுவைக் கப்பல் தூத்துக்குடி செல்வதற்காக பாலத்தை கடந்து சென்றன. பாம்பன் சாலை பாலத்தில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல் கடந்து சென்றதை பார்த்து ரசித்தனர். வாகனங்களை பாம்பன் பாலத்தில் சுற்றுலா பயணிகள் நிறுத்தி கொண்டு கப்பல் சென்றதைப் ஆர்வத்துடன் பார்த்த பயணிகளால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


 

Tags:    

Similar News