இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இ.கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்
நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.
இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.
இராமேஸ்வரம் நகராட்சியில் பொதுமக்கள் புதிய வீட்டு வரி விதிப்புக்கு, புதியகட்டிட அனுமதிக்காக மனு செய்தாலோ, வருட கணக்கில் அழையவிடும் போக்கு உள்ளது. மேலும் ரூபாய் 10,000, முதல் பல லட்சம் வரை பேரம் பேசி வலுகட்டாயமாக பணம் பறிப்பதாக கூறப்படுகின்றது. சிலர் பணம் கொடுத்தும் காரியம் முடியாமல் அழைகின்றனர்.பணம் கொடுக்காதவர்களின் நிலையோ பரிதாபம்.
இதுகுறித்து எத்தனை முறை புகார் செய்தாலும் உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதாக இல்லை, இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் உருவ பொம்மையில் செய்த லஞ்ச பேய்களை விரட்டும் வகையில் கோடாங்கி மற்றும் வேப்பிலை அடித்து இராமேஸ்வரம் நகராட்சி ஊழியருக்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.