இராமநாதபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது

இராமநாதபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-19 16:01 GMT

கொள்ளையடிக்க திட்டம் தீட்டியவர்கள் கைது

இராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய ஆறு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்திய சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கடந்த செவ்வாய்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக காருடன் நின்ற 6 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர் இதனால் சந்தேகமடைந்த போலீசார் அங்கு நின்ற காரை சோதனையிட்டபோது அதில் கை உறை, முகம் மறைக்கும் தொப்பி, கத்தி, அரிவாள், இரும்பு கம்பி ஆகியவை இருந்துள்ளது. இதையடுத்து காரை போலீசார் பறிமுதல் செய்து ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கீழக்கரையை சேர்ந்த செய்யது முகம்து பக்கீர், வேலூரைச் சேர்ந்த ரஹீம், பார்த்திபன், கார்த்திக், இப்ராகிம், ராபர்ட் ஜான் கென்னடி ஆகியோர் என தெரிய வந்தது.

கீழக்கரையில் வேலை இடத்தில் கையாடல் செய்த செய்யது முகமது பக்கீர் வேலூர் சென்ற இடத்தில் திருட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செய்யது முகமது பக்கீர் வேலூர் கும்பலுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ராமநாதபுரம் வந்து கீழக்கரை உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 கைது செய்த பஜார் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News