இராமநாதபுரம் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது.

எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மா.செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Update: 2021-06-08 14:03 GMT

இராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமீபகாலமாக கட்சித் தொண்டர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அப்போது கட்சி தலைமை இல்லாமல் இருப்பதாகவும், தலைமை ஏற்பதற்கு வரவேண்டும் என தொண்டர் கூறுகிறார். அதற்கு வருவேன் என சசிகலா பதிலளிக்கிறார். உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியிலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமென நிர்வாகி கூறுகிறார். தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சசிகலா கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Tags:    

Similar News