இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏஐடியுசி மீனவ அமைப்பினர் கடலில் இறங்கி போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராகவும், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்றத்தில் கொண்டு வர உள்ள மசோதவை நிறைவேற்ற கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன முழக்கமிட்டனர்.

Update: 2021-07-23 14:28 GMT
இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐடியுசி மீனவ அமைப்பினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர் .

மீனவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இராமேஸ்வரத்தில் ஏஐடியுசி மீனவ அமைப்பு கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில்  துவங்க உள்ள பாராளுமன்றத்தில்  குளிர் கால கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவால், கடல் எல்லை வரையறை, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை, மீன்பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு பெறுவதற்கு கட்டணம், பிடித்து வரும் மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்ற அம்சங்கள்  மீனவர்களை பாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி  இராமேஸ்வரம் ஏஐடியுசி மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்றத்தில் கெர்டு வர உள்ள மசோதவை நிறைவேற்ற கூடாது என மீனவர்கள் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் இந்திய கடல்சார் மீன்வள மசோதா எழுதப்பட்ட பேப்பரை கிழித்து கடலில் வீசியும் தங்களது எதிர்ப்பைத்தெரிவித்தனர். 

Tags:    

Similar News