இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-02-05 01:34 GMT

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 28ஆம் தேதி முதல் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில், நாளை 4ஆம் தேதி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 

இராமநாதபுரம் நகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இராமநாதபுரம் நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை விறுவிறுப்பாக தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சந்திரா வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News