பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் வேகம் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-11 05:09 GMT
கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகள்.

தமிழகத்தில் கொரொனா  இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் ஏராளமானோர் பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .கொரொனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமாக வயோதிகர்கள் மட்டுமின்றி எந்த இணை நோயும் இல்லாத இளைஞர்களையும் பலிகொண்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து நோய் தொற்று சங்கிலியை உடைக்க ஊரடங்கை மதித்து தனித்திருக்குமாறு கூறியிருந்த நிலையில் இராமநாதபுரம் நகர் பகுதியில் அரசின் உத்தரவை துளியும் மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பின் வேகம் மேலும் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Tags:    

Similar News