திமுக அரசைக் கண்டித்து இராமநாதபுரத்தில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

திமுக அரசைக் கண்டித்து இராமநாதபுரத்தில் பாஜக உண்ணாவிரதப் போராட்டம்.

Update: 2022-07-05 11:15 GMT

இராமநாதபுரம் பாஜக சார்பில் திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

இராமநாதபுரத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக அரசைக் கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமையில், மாநில பொது செயலாளர் பொன்.பால கணபதி, மாவட்ட பட்டியல் அணி தலைவர் ரமேஷ்கண்ணா, மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா.கார்த்திக், மாவட்ட  பொருளாளர் தரணி.முருகேசன்,  ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், மனசாட்சி இல்லாத மக்கள் விரோத திமுக ஸ்டாலின் அரசை கண்டித்தும், கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனையும், லாக்கப் மரணங்களும், அத்துமீறும் பாலியல் தொல்லைகளும், எண்ணிக்கை இல்லா கொலை குற்றங்களும், மத்திய அரசு திட்டத்தில் மாநில அரசின் ஸ்டிக்கர் விளம்பரமும்,தொடர் மின்வெட்டு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்தும் ,பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீதான தொடர் பொய் வழக்குகள் போடப்பட்டு வருவதை கண்டித்தும் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நகர் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பாஜக உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News