இராமநாதபுரத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் கொண்டாட்டம்

இராமநாதபுரத்தில் மத்திய மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2021-04-16 07:45 GMT

இராமநாதபுரம் மாவட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக அலங்கரிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

கூட்டமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.கர்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.கே.சேக்கிழார் வரவேற்புரையாற்றினார். மரியம் ஜேம்ஸ் மாநில கொள்கை பரப்பு செயலாளர், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் முருகன், மாவட்ட அமைப்பாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கவேலு, தலைமை நிலைய செயலாளர் காளிதாசு, மாநில துணை செயலாள் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி வட்டார தலைவர் மாதவன், அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர், மோகன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் தர்மராஜ். நயினார் கோவில் வட்டார அமைப்பாளர் சொக்கநாதன் Dr.அம்பேத்கர் தொழிற்சங்கம் இராமகிருஷ்ணன், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், வீரக்குமார், கணேசன், பிற்படுத்தப்பட்ட நலத்துறை தியாகராஜன், ஆ.தி.நல முத்துக்குமார் ஆசிரிய பயிற்றுநர்கள் திலகராஜ், முருகவேல், மாவட்ட ஆலோசகர் பழனியாண்டி (துணை ஆட்சியர்), விரிவுரையாளர் நாகராஜ், லாந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், மருதம் மக்கள் இயக்கம் வேலு பூமிநாதன், நிதிக்குழு பொறுப்பாளர்கள் இராமர், அழகுகுமார், சுபாஷ் சந்திரபோஸ், கல்வித்துறை ராமு, டாஸ்மாக் துறை சோமசுந்தரம், கர்ணன், பாட்டாளி மக்கள் கட்சி அழகேசன், மருது சேனை மாநில நிர்வாகி தினேஷ்குமார், பா.ஜ.க. பொறுப்பாளர் கணல் காந்தி, ஆசிரியர்கள் ஆனந்தகுமார், முத்துச்சாமி, கோவிந்தராஜ், ஊரக வளர்ச்சி கிருஷ்ணன், கால்நடைத்துறை சாத்தையா நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சமத்து உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினர்.

Tags:    

Similar News