அப்துல்கலாம் பிறந்தநாள்: நினைவிடத்தில் கும்பத்தினர், ஆட்சியர் மலர் தூவி மரியாதை

அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர், மாவட்ட ஆட்சி தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2021-10-15 11:09 GMT

அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சி தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்துல் கலாம் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சி தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் உறவினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு துவா ஓதி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலாமின் அண்ணன் மகன், மகள், பேரன்கள் ஜமாத்தை சேர்ந்தவர்கள், நடிகர் தாமு உட்பட ஏராளமானோர் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News