ராமேஸ்வரம் அருகே நாட்டுப்படகு மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்

ராமேஸ்வரம் அருகே நாட்டுப்படகு மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடி வருகின்றனர்.

Update: 2022-04-11 13:11 GMT

முனியராஜ்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து மீனவர்கள் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் இருந்த முனியராஜ் என்பவர் நடுக்கடலில் தவறி விழுந்த மாயமானார். மீனவரை சக மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இது குறித்து மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் நாட்டு படகு ஒன்றில் 12 மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக படகில் இருந்து மீனவர் முனியராஜ் என்பவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படகில் இருந்த மற்ற மீனவர்கள் வேகமாக கடலில் குதித்து தேடி உள்ளனர். ஆனால் கடலில் விழுந்த மீனவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இதுகுறித்து ராமேசுவரம் கடலோர காவல் நிலையத்தில் மீனவர் மாயமானது குறித்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர். கடலில் தவறி விழுந்த மீனவரை இன்று மீண்டும் மீனவர்கள் தேட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News