இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை: 32 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 32 நபர்கள் போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 468 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.