பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

Update: 2022-04-16 03:30 GMT

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய வழக்குகளில்,  கஞ்சா மற்றும் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக வேப்பங்குளம் கிராம தவமணி, மதுரை மேலூர் கடுகுமுனிச்சாமி, கீழதூவல் கிராம ராதா என்ற ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,  அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மாவட்ட எஸ்பி கார்த்திக் பரிந்துரையின் பேரில்,  மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் 3 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்,  சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே 3 பேரும் சிறையில் உள்ளனர்.

Tags:    

Similar News