இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

Update: 2021-03-12 04:30 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டு வரும் துப்பாக்கிகளை, அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 166 துப்பாக்கிகள் உரிய அனுமதி இருந்த நிலையில் அவற்றில் 136 துப்பாக்கிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 30 துப்பாக்கிகள் வங்கி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி.,கார்த்திக் தெரிவித்தார்.

Tags:    

Similar News