புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

பணி முடிந்தவுடன் கடையில் உள்ள மின் மோட்டாரை சுவிட்ச் ஆப் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்

Update: 2021-10-15 05:30 GMT

தொண்டைமான்நகரில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு இரு சக்கர வாகனம்  ஆட்டோ   சர்வீஸ் செய்து கொண்டிருந்தபொழுது   மின்சாரம் தாக்கி இறந்து போன  அசாருதீன் இன் புகைப்படம் 

 புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தொண்டைமான் நகர் பகுதியில் உள்ள ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை யில் பாலன் நகரை சேர்ந்த அசாருதீன் என்ற இளைஞர் பல வருடமாக வேலை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் சர்வீஸ் செய்ததற்காக அதிக அளவில் வந்துள்ளது. நேற்று மதியம் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அசாருதீன் மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர்  வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  பணி முடிந்தவுடன் கடையில் உள்ள மின் மோட்டாரை சுவிட்ச் ஆப் செய்தபோது,  எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அசாருதீன் கடைக்குள் தூக்கி எறியப்பட்டார்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அசாருதீனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி இளைஞர் அசாருதீன் உயிரிழந்தார்.இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News