சாலையோர மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு குடை வழங்கிய ரோட்டரி சங்கம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு ரோட்டரி சங்கம்குடை வழங்கியது
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.
அதேபோல் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் பலாப்பழம் வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளி வியாபாரிக்கு வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிழல்தரும் குடையை புதுக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.