புதுக்கோட்டையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் போக்குவரத்து பாதிப்பு

மழையால் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது

Update: 2021-11-17 15:15 GMT

புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் சாலையில் புரண்டோடும் மழை  நீர்

புதுக்கோட்டையில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து மிதமான வெயில் அடித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் இரண்டு மணி நேரங்களாக வெளுத்து வாங்கிய பலத்த மழையினால் புதுக்கோட்டை பிருந்தாவனம் பறையனார் அடப்பன்வயல் கீழராஜவீதி மேல ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டது.

இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.தொடர்ந்து மழை காலம் என்பதால் நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் வரத்து வரிகளில் தூர்வாரி மழை நீர் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News